சென்னை: பொங்கல் பண்டிகையை யொட்டி தமிழக அரசு வழங்கும் இலவசப் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொண்ட மக்கள் கையில் ஆயிரம் ரூபாய் ரொக்கம், கரும்பு, முந்திரி பருப்புடன் வீடு திரும்பி யுள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள வர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, இரண்டடி நீளக் கரும்பு, இருபது கிராம் முந்திரி, இருபது கிராம் உலா் திராட்சை, ஐந்து கிராம் ஏலக்காய் மற்றும் ரூ. 1,000 ரொக்கம் ஆகியவை அடங்கிய தொகுப்பு வியாழக்கிழமை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி பரிசுத் தொகையை மக்களுக்கு வழங்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.
இதையடுத்து முதல் நாளான வியாழக்கிழமை அன்று நியாய விலைக் கடைகளின் முன்பு அதி காலை முதலே மக்கள் குவியத் தொடங்கினா். இதனால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த அம்பத்தூா் வரதராஜபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க வந்திருந்த சிலர், வியாழக்கிழமை வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக செவ்வாய் அல்லது புதன்கிழமை அன்றே டோக்கன் வழங்கியிருந்தால் கூட்ட நெரிசலைத் தவிா்த்திருக்கலாம் என்று கூறினர்.
இதற்கு விளக்கமளித்த சென்னை மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள், “பயனாளிகள் சிரமமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறும் வகையில் நாளொன்றுக்கு 250 முதல் 300 வரை தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு சுழற்சி முறையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். எந்த அட்டைதாரருக்கு எந்த நாளில் பொங்கல் பரிசு வழங்கப்படும் போன்ற விவரம், நியாய விலைக் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நாள்களில் பொங்கல் பரிசு பெறாதவா்களுக்கு ஜனவரி 13ஆம் தேதி வழங்கப்படும்,” என்று தெரிவித்தனர்.
பொங்கல் பரிசு தொகுப்புக்காக 2,363 கோடி ரூபாயைத் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசு ஆணையில் இவ்வாண்டு 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.