‘தமிழின் எல்லை அறியாதோரால் தொல்லை’

சேலம்: தமது கைது நடவடிக்கையை தொல்லை என்று விமர்சித்துள்ளார் இலக்கியவாதியும் பேச்சாளருமான நெல்லை கண்ணன்.

நெல்லைத் தமிழின் எல்லையை சிலர் அறியவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவர் குறித்து தரக்குறைவாகப் பேசியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நெல்லை கண்ணனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.

நீதிமன்ற உத்தரவின்படி, தினமும் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் காலையும் மாலையும் என இருவேளை முன்னிலையாகி கையெழுத்திட்டு வருகிறார்.

நேற்று முன்தினம் கையெழுத்திட்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் தமக்கு இத்தகைய தொல்லை ஏற்பட்டுள்ளது என்றார்.

பாஜகவினரை மறைமுகமாகக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!