காணும் பொங்கல்: எங்கும் கூட்டம்

சென்னை: பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான நேற்று காணும் பொங்கல் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் பொழுது போக்கு இடங்களில் மக்கள் குடும்பம் குடும்பமாகக் கூடி மகிழ்ந்தனர். சென்னை நகரில் மட்டும் 10,000 போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். வீர விளையாட்டுகளும் கேளிக்கை நிகழ்ச்சிகளும் மாநிலத்தின் பல இடங்களிலும் இடம்பெற்று சிறார் முதல் முதியவர் வரை எல்லாரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் எங்கும் தங்கள் பழைய பாரம்பரியங்களைக் கூடுமானவரையில் கட்டிக்காக்க மக்கள் முயன்றனர். காளையை அடக்கி, ‘இளவட்டக்கல்’ என்ற கனமான கல்லைத் தூக்கி தன் பலத்தைக் காட்டும் ஆண்மகனை அந்தக் கால சமூகம் போற்றி, புகழ்ந்து, வரவேற்றுக் கொண்டாடியது. இந்தப் பாரம்பரியத்தை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் 70 முதல் 100 கிலோ எடையுள்ள வழுவழுப்புடன் உருண்டையாக இருந்த ஐந்து கற்களைத் தூக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று இளவட்டக்கல் தூக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுபோல் பல இடங்களிலும் போட்டிகள் நடந்தன. படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!