சென்னை: ஹைதராபாத்தைச் சேர்ந்த உமாராணி என்ற விதவையுடன் திருமண இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு ரூ.27 லட்சத்தைச் சுருட்டியதாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அந்த மாதுடன் தொடர்புகொண்ட ராஜசிம்மநாயுடு என்பவர் தான் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துவிட்டதாகக் சொல்லி அவரை ஏமாற்றினார். ஆனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உமாராணி உடனே ராஜசிம்மநாயுடு மீது போலிசில் புகார் செய்தார். சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த ராஜசிம்ம நாயுடுவைக் கைது செய்து போலிஸ் விசாரிக்கிறது.