முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை தன் சொந்த ஊரில் கொண்டாடுவது வழக்கம். அதன்படி அவர் இந்த ஆண்டும் சொந்த கிராமமான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் பொங்கல் கொண்டாடினார். அப்போது அவரைப் பேட்டி எடுத்து அதை தமிழக தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. 'முதல்வன்' என்ற பெயரிலான அந்தப் பேட்டியை யு-டியூப்பில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து பாராட்டினர். அதையடுத்து பேட்டி நேற்றும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. படம்: தமிழக ஊடகம்
அறுவடை செய்யும் முதல்வர்
1 mins read
சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. படம்: ஊடகம் -

