சென்னை: தமிழகத்தில் சாலைகளில் பாதுகாப்பை மேம்படுத்த இன்று முதல் சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்த வாரத்தில் தலைக்கவசம், இருக்கை வார் முக்கியத்துவம் வலியுறுத்தப்படும்.
ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம், மாணவ, மாணவிகளுக்குச் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த போட்டிகள் நடத்தி பலருக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
இதனிடையே, சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி செய்தி வெளியிட்டுள்ள முதல்வர் பழனிசாமி ‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கினை எட்ட மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைப் பிடிக்க வேண்டும் என்றார்.