புத்தகக் கண்காட்சி: 13 லட்சம் பார்வையாளர்கள்; ரூ.20 கோடிக்கு விற்பனை

சென்னை: கடந்த சில தினங்களாக சென்னையில் நடைபெற்று வந்த புத்தகக் கண்காட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இந்தாண்டு சுமார் இருபது கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்றுத் தீர்ந்ததாக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி வாசிப்பு பழக்கம் உள்ள அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் இருக்கும். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளீயீட்டாளர்கள் சங்கம் (பபாசி) இந்தக் கண்காட்சியை அரசு ஆதரவுடன் நடத்தி வருகிறது.

இந்தாண்டும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரளாகக் கண்காட்சிக்கு வந்ததாகவும், பல்வேறு தலைப்புகளில் வெளிவந்துள்ள புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றதாகவும் பபாசி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கடைசி நாளான நேற்று முன்தினம் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இம்முறை செய்தியாளர் அன்பழகன் என்பவரது அரங்கை அப்புறப்படுத்துமாறு பபாசி உத்தரவிட்டதை அடுத்து சர்ச்சை வெடித்தது.

இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து, கண்காட்சித் திடலில் உரையாற்ற இருந்த நாடாளுமன்ற எம்பியும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான வெங்கடேசன் நிகழ்ச்சியைப் புறக்கணித்து வெளியேறினார். மேலும் பலரும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்திருந்தனர்.

படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!