சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் 250% கூடியது

சென்னை: தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரித்திருக்கிறது.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக பல தரப்புகளும் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் 2018ஆம் ஆண்டில் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4,155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 18% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 5 ஆண்டுகளில் தெரிவிக்கப்பட்ட சிறரர்களுக்கு எதிரான புகார்களில் 49% பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமை தொடர்பானவை என்பது இன்னும் அதிர்ச்சி தருவதாகத் தெரிகிறது.

இந்தியா முழுவதையும் பார்க்கையில் சிறார்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகமாக நடக்கும் முதல் ஐந்து மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருக்கிறது.

சிறார்களுக்கு எதிராக புதிய புதிய வழிகளில் கொடுமைகள் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகவும் இவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகம், நாடு முழுவதும் இதன் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!