ராமநாதபுரம்: சிறப்பு போலிஸ் அதிகாரி வில்சன் கொலை விவகாரத்தில் தொடர்புள்ள வர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு பேரைத் தேவிப்பட்டினம் போலிஸ் கைது செய்தது.
முகமது அலி, முகமது அமீர், பிச்சைக்கனி, ஷேக் தாவுத் ஆகிய அந்த நால்வர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப் பட்டது. இதனிடையே, அதிகாரி வில்சன் கொலை தொடர்பில் கைதான அப்துல் ஷமீம், தவ்பீக் இருவரையும் போலிஸ் கேரளா வுக்குக் கொண்டுசென்றது.
வில்சன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எர்ணாகுளத்தில் கழிவுநீர் ஓடையில் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.