திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த டேனியல் என்பவரின் மகளை சுரேஷ்குமார் என்பவர் காதலித்தார். ஆனால் டேனியல் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து சுரேஷ்குமார் தன் நண்பர்களான மணிகண்ட பிரபு, அருண்குமார், விஜயன் ஆகியோருடன் ஒரு காரில் சென்று திண்டுக்கல் அருகே டேனியல் சென்றுகொண்டு இருந்த வேறு ஒரு கார் மீது மோதி அவரைக் கொல்ல முயன்றார்.
ஆனால் சரியான நேரத்தில் போலிசுக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து காரை விரட்டி நால்வரையும் போலிஸ் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.