நெல்லை: தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அங்குள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஒரே நாடு-ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டம் வருகிற ஜூன் மாதம் முதல் இந்தியா முழுவதும் நடப்புக்கு வரும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
இந்த திட்டத்தின்படி, குடும்ப அட்டை வைத்து இருப்பவர்கள் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்.
தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்து இருப்பவர்கள் மாநிலத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க வசதியாக திட்டம் நடப்புக்கு வருகிறது.
முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்படும்.
அந்த மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள், அங்குள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம். மற்ற மாவட்டங்களிலும் இந்த திட்டம் பிறகு அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.