கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடியில் அடுத்த வாரத்தில் ஆறாம் கட்ட அகழாய்வு தொடங்க உள்ளது. மத்திய தொல்லியல் துறை சார்பில் மூன்று முறையும் தமிழக தொல்லியல் துறை சார்பில் இரண்டு முறையும் அகழாய்வுகள் அங்கு நடந்து உள்ளன.
தொடர்ந்து, இந்தாண்டும் அகழாய்வுக்கான அனுமதியை மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியம் வழங்கியுள்ளது. ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய இடங்களிலும் அகழாய்வுகளை மேற்கொள்ள அனுமதி தரப்பட்டு உள்ளதால் அந்த இடங்களிலும் ஆய்வுகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.