சென்னை: 2019 செப்டம்பர் 14ஆம் தேதி ‘சத்யம்’ என்கிற தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசையும் முதல்வரையும் விமர்சித்துப் பேசியதாக செய்தி வெளியானது. அப்போது “முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய பாஜக அரசின் மேஸ்திரி போல செயல்படுகிறார்,” என்று கூறியிருந்தார்.
சீமானின் இந்தக் கருத்து தமிழக அரசுக்கும் முதல்வரின் பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் இருப்பதாக சீமான் மீதும் சத்யம் தொலைக்காட்சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் சார்பாக சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு சீமான் நேற்று முன்னிலையானார். இதனையடுத்து, சீமான் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்ய நீதிபதி வழக்கை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.