புதுக்கோட்டை: காவிரி, வைகை, குண்டாறு ஆகியவற்றின் இணைப்பு திட்டத்திற்கு வரவுசெலவுத் திட்டத்தில் தமிழக அரசு முதல் கட்ட நிதியாக ரூ. 700 கோடி ஒதுக்கியுள்ளது. இதை, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
காவிரியில் இருந்து வெளியேறி கடலில் கலக்கும் உபரி நீரை அணைகட்டி அங்கிருந்து கிளை வாய்க்கால்கள் வழியாக குண்டாறு, வைகைக்குத் திருப்பி விட்டால் புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் பலனடையும்.