சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிப்பது குறித்து சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என காங்கிரஸ் எம்எல்ஏ விஜய தாரணி தெரிவித்துள்ளார்.
நேற்று கூடிய சட்டப்பேர வையில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது பேசிய விஜய தாரணி, “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் 28 ஆண்டு களாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சித் தலைவர் களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கூட அவர்களை மன்னித்து விட்டனர். சட்டத்தின்படி அவர்களை விடுவிக்க வேண்டுமெனில் விடுவித்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு அனைவருமே வந்துவிட்டோம். அரசு தன் கடமையைச் செய்ய வேண்டும்” என்று கூறினார்.