ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தில் மாண்ட 16 போலிசார் குடும்பங்களுக்கு இழப்பீடு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் பலியான 16 போலிசார் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய விஜயதரணி, ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது 16 போலிசார் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டார்.

“அவர்களில் என் தாயாரும் ஒருவர். ராஜீவ் காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டதாகவும், தற்போது சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலையை சட்டம் முடிவு செய்யட்டும் என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.

“அந்த 7 பேரின் விடுதலையில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று தெரியவில்லை. விடுதலை ஆகும் பட்சத்தில் அதற்கு முன்பாக அந்த 16 போலிசாரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்,” என்று விஜயதரணி கோரிக்கை விடுத்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை அல்லது வேறு ஏதேனும் ஒருவகையில் இழப்பீட்டை அளிக்க அரசு முன்வர வேண்டும் என்றார் விஜயதரணி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!