திருவண்ணாமலை: அண்மையில் நீட் தேர்வில் நடந்த முறைகேடு களைப் போலவே அடுத்ததாக இப்போது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2ஆம் நிலை போலிஸ் தேர்விலும் மிகப் பெரிய முறைகேடு நடந்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த முறைகேடு தொடர்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நிர்வாகம் நடத்திய குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், இதுதொடர் பான வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருவண்ணா மலை மாவட்டத்தைச் சேர்ந்த அன் பரசன் உள்பட 15 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய் துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
“தமிழக காவல்துறையில் 2ஆம் நிலை காவலர்கள், சிறைத்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறை வீரர்கள் என மொத்தம் 8,888 பணி யிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது.
“பின்னர் எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளும் முடிவடைந்துவிட்டன. கடந்த 2ஆம் தேதி தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.
“இந்த தேர்வில் வேலூர் மாவட் டத்தில் மட்டும் சுமார் 1,019 பேரும் விழுப்புரம் மாவட்டத்தில் 763 பேரும் தேர்வாகி உள்ளனர்.
“இவர்கள் அனைவரும் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள். இவர்களில் பலர் முறைகேடுகள் செய்து தேர்வாகி உள்ளனர்.
“இதுகுறித்து மாநிலப் போலிசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசார ணைக்கு வர உள்ளது.