நடுத்தெரு நடனப் பித்து கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற நடனப் பித்து, டிக்டாக்கில் தனது திறமைகளை வெளியிட்டு பலரின் பாராட்டுகளை அள்ளவேண்டும் என்ற தீரா ஆசையுடன் நடுத்தெருக்களில் ஆடி ஆடி பலரையும் அலைக்கழித்துவிட்டதாக போலிஸ் தெரிவித்தது.

பேருந்து நிலையம், தெருக்களில் நடந்து செல்லும்போதே திடீரென நடனப் புயலாக மாறிவிடும் கண்ணன், எதிரில் நடந்து வரும் பொதுமக்கள், பெண்கள் மீது மோதுவது போல் சென்று பின் விலகி நடனம் ஆடி வந்தார்.

இது பலருக்கும் பயத்தைக் கிளப்பிவிட்டது. தன் நடனக் காட்சி களை அவர் டிக்டாக்கில் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பி வந்தார்.

பொது இடங்களில் மக்கள் திடீரென அதிர்ச்சி அடையும் வகையில் கண்ணன் நடனமாடுவது பிரச்சினையானதால் போலிசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து போலிஸ் கண்ணனைக் கைது செய்தது. புதுக்கோட்டை மற்றும் திருச்சி பேருந்து நிலையங்கள், திருச்சி ரயில்வே நிலையம் என பல்வேறு இடங்களில் கண்ணன் நடன லீலைகளை அரங்கேற்றியது அம்பலமானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!