அமைச்சர்: மக்கள் நலனுக்காகவே ஜால்ரா

திண்டுக்கல்: மக்கள் நலனுக்காக ஜால்ரா போடுவது நல்லதுதான் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத் திருத்தம் எனும் ஒரே ஒரு சட்டப் பிரச்சினையை எதிர்க்கட்சியான திமுக கையில் எடுத்து அதனைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று வத்தலக்குண்டு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

குடியுரிமைச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிப்புக்குள்ளானால் அவர்களைக் காப்பாற்ற அதிமுகதான் முதலில் நிற்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு மத்திய அரசுக்கு ஜால்ரா போடுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் சீனிவாசன்.

“எதற்கெடுத்தாலும் இந்த ஆட்சி கவிழ வேண்டும். தூக்கி எறியப்பட்ட வேண்டும் என்றே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புலம்பிக்கொண்டிருக்கிறார்.

“மத்திய அரசுக்கு ஏன் ஜால்ரா போடுகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். ஜால்ரா போட்டிருக்காவிட்டால் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்திருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார் அமைச்சர் சீனிவாசன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!