நெல்லை: ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஏமாற்றி, அபகரித்துக்கொண்ட நான்கு பிள்ளைகளிடமும் வயதான தந்தைக்கு மாதம் ரூ.10,000 ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மாதா மாதம் பணம் வழங்கத் தவறும் பட்சத்தில் சிறைக்குச் செல்ல நேரிடும் எனவும் முதியவரின் பிள்ளைகளுக்கு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெல்லையைச் சேர்ந்தவர் 77 வயது முதியவர் சுடலைமணி. இவர் தனது நான்கு பிள்ளைகளும் தன்னை பராமரிக்காமல் விட்டு விட்டதாக ஆட்சியர் அலுவலகத் தில் புகார் மனு அளித்தார்.