திருவானைக்காவல் கோவிலில் 505 தங்கக் காசுப் புதையல்

திருச்சி: திருச்சி, திருவானைக் காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் மலர்த் தோட்டம் அமைப்பதற்காக ஒர் அடி ஆழத்திற்கு குழி தோண்டியபோது தங்கப் புதையல் சிக்கியது.

இந்த புதையலில் 1,716 கிராம் எடையிலான 505 தங்கக் காசுகள் இருந்தன.

இந்தக் கோயிலில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னிதி முன் உள்ள வாழைத் தோட்டத்தை நந்தவனமாக மாற்று வதற்கான பணிகள் நடந்து வரு கின்றன.

இந்தக் கட்டுமானப் பணிகளுக் காக குழி தோண்டியபோது பித் தளை கூஜா ஒன்று தட்டுப்பட் டுள்ளது.

இதுகுறித்து, தகவல் அறிந்த பணியாளர்கள் கோவில் நிர்வாக அதிகாரி மாரியப்பனுக்குத் தகவல் கொடுத்தனர்.

கோவில் நிர்வாக அதிகாரிகள் பித்தளைக் கூஜாவைத் திறந்து பார்த்தபோது, அதனுள் நூற்றுக் கணக்கான தங்க நாணயங்கள் இருந்தன.

வருவாய்த் துறை அதிகாரிகள், தங்க நாணயங்களைச் சரிபார்த்த போது அதில் 1,716 கிராம் எடையில் 505 நாணயங்கள் இருந்தன.

அதில் இருந்த ஒவ்வொரு தங்க நாணயமும் 3 முதல் 3.4 கிராம் வரை எடை இருந்தது.

அதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள், தங்க நாணயங்க ளுடனான கூஜா உண்டியல் புதை யலை திருச்சி மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தொல்பொருள் ஆய்வுத் துறையினர் ஆய்வு நடத்திட திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அகிலாண்டேஸ்வரி அம்மன் சந்நிதிக்கு அருகே நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் கிடந்த பகுதியில் தங்கப் புதையல் கண் டெடுக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!