தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பெண் காவலர் ஒருவர் பகலில் போலிஸ் சீருடையுடன் பணிபுரிவதும் இரவில் சாதாரண உடைகளுடன் கோழிகளைத் திருடி வந்ததும் போலிஸ் விசாரணை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி அருகே உள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் தினகரன், 30. இவர் 42 கோழிகளை வளர்த்து வருகிறார்.
பிப்ரவரி 22ஆம் தேதி, சொந்த வேலையாக தினகரன் குடும்பத்துடன் மதுரைக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், தினகரன் வளர்த்து வந்த கோழிகளில் 39 கோழிகளை யாரோ மர்ம நபர்கள் திருடிவிட்டதாகவும் 3 கோழிகள் மட்டுமே மிஞ்சி இருப்பதாகவும் அவருடைய தம்பி கைபேசி மூலம் தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து மதுரையில் இருந்து வீடு திரும்பிய தினகரன், கோழிகள் களவு போனது குறித்து கோபி நாதன்பட்டி காவல் நிலை யத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலிசார் விசாரித்தபோது, வடகரை யைச் சேர்ந்த பாரதி, 28, பொன்னுமணி, 28, பூவர சன், 27, ஆகிய மூவரும் கோழிகளைத் திருடி, அதை விற்று கிடைத்த பணத்தில் மது அருந்தியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்களில் பொன்னுமணி, மத்திய பாதுகாப்புப்படையில் காவலராகப் பணியாற்றி வருவதும் விடுமுறையில் அவர் சொந்த ஊருக்கு வந்து கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கோழித் திருட்டில் ஈடுபட்டு பொழுதை உல்லாசமாகக் கழித்ததும் தெரியவந்தது.