தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது நடவடிக்கை தேவை'

1 mins read
7edb1705-c24f-4ecf-82b0-5a9898342f46
-

சென்னை: "தமி­ழில் பெயர் பலகை வைக்காத கடை­கள் மற்­றும் வணிக நிறு­வ­னங்­கள் மீது கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்ள வேண்­டும்," என்று பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் கூறி­யுள்­ளார்.

"அனைத்து கடை­கள் மற்­றும் வணிக நிறு­வ­னங்­க­ளின் பெயர் பல­கை­கள், தமி­ழில் எழு­தப்­ப­டு­வது கட்­டா­யம் என்ற அர­சாணை தீவி­ர­மாக செயல்­ப­டுத்­தப்­படும்," என்று தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

இந்த நிலை­யில் "தமி­ழில் பெயர் பலகை எழு­தாத கடை­கள் மற்­றும் வணிக நிறு­வ­னங்­கள் மீது கடும் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்ள வேண்­டும்.

"நிறு­வ­னங்­க­ளுக்கு, 50,000 ரூபாய் அப­ரா­தம் என்ற பழைய அணு­கு­முறை நீடித்­தால் அனைத்து பெயர் பல­கை­க­ளி­லும் தமிழ் மணக்­கும் என்­பது கன­வா­கி­வி­டும். கடு­மை­யாக அப­ரா­தங்­கள் விதிக்­கப்­பட்­டால்­தான் பெயர் பல­கை­களை, தமிழ் மொழிக்கு மாற்­றும் அர­சின் நோக்­கம் நிறை­வே­றும்," என்று ராம­தாஸ் கூறி­யுள்­ளார்.