தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஜினி அரசியலுக்கு வருவது அவருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது: வடிவேலு

2 mins read
ee6f22e5-d0dc-4eb7-a002-74dcade27ec7
-

சென்னை: அண்­மை­யில் ரஜினி அளித்த பேட்டி குறித்து பேசிய நடி­கர் வடி­வேலு, "2021ஆம் ஆண்டு நான்­தான் முதல்­வர் ஆக­லாம்னு பிளான் பண்­ணி­யி­ருக்­கி­றேன்," என்று கூறி­யுள்­ளார்.

திருச்­செந்­தூ­ரில் உள்ள சுப்­ர­ ம­ணி­யன் சுவாமி கோயி­லில் சாமி தரி­ச­னம் செய்த பிறகு செய்­தி­யா­ளர்­களை வடி­வேலு சந்­தித்­தார்.

அப்­போது அவ­ரி­டம் ரஜி­னி­யின் அர­சி­யல் நுழைவு பற்றி கேட்­கப்­பட்­டது.

அதற்கு வடி­வேலு, "ரஜினி சார் அர­சி­ய­லுக்கு வரு­வாரா என்று உங்­க­ளுக்­கும் தெரி­யாது, எனக்­கும் தெரி­யாது, ஏன், அவ­ருக்கே தெரி­யாது. அவர் வரும்­போது பார்த்துக்­கொள்­ள­லாம்," என்று நகைச்­சு­வை­யாக கூறி­னார்.

"2021 ஆம் ஆண்டு நான் சி.எம் ஆக­லாம்னு பிளான் பண்­ணி­யி­ருக்­கேன். நான் தேர்­தல்ல நின்னா நீங்­கல்­லாம் ஓட்­டுப் போடு­வீங்­கள்ள. அப்ப நான்­தான் சிஎம்மு," என்­றும் அவர் சொன்னார்.

சென்ற வியா­ழக்­கி­ழமை சென்­னை­யில் உள்ள லீலா பேல­ஸில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த நடி­கர் ரஜி­னி­காந்த், அர­சி­ய­லுக்கு வந்­தால் செயல்­ப­டுத்­தப்போகும் மூன்று திட்­டங்­கள் குறித்­துப் பேசி­னார். முத­லா­வது திட்­டம், தேவை யில்­லாத கட்­சிப் பத­வி­களை வைத்­துக் கொள்­ளா­மல் இருப்­பது. தேர்­த­லுக்கு மட்­டும் பத­வி­களை உரு­வாக்கி, ஆட்­சிக்கு வந்­தால் அந்தப்­ ப­த­வி­கள் நீக்­கு­வது. பதவிகளில் அதி­கம் பேர் நிய­மிக்­கப்­பட்­டால் அது ஊழ­லுக்கு வழி வகுக்­கிறது.

இரண்­டா­வது திட்­டம், 50 வய­துக்­குக் கீழே இருக்­கும் இளை ஞர்­க­ளுக்­கு பெரும்­பான்­மை­யான வாய்ப்­பு­க­ளைக் கொடுப்­பது.

மூன்­றா­வது திட்­டம், கட்­சிக்கு ஒரு தலைமை. ஆட்­சிக்கு ஒரு தலைமை," என்று திட்­டங்­களை அறி­வித்­தார்.

இதற்­கி­டையே ரஜி­னி­யின் அர­சி­யல் முடிவை வர­வேற்­ப­தாக சீமான் தெரி­வித்­துள்­ளார்.

அர­சி­ய­லில் நடி­கர் ரஜி­னி­காந்த் நுழை­வ­தற்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்­த­வர்­களில் சீமா­னும் ஒரு­வர்.

ஆனால் ரஜி­னி­காந்த் தமக்கு முதல்­வ­ராக விருப்­ப­மில்லை என்று அறி­வித்துள்ளதால் அவ­ருக்கு சீமான் வாழ்த்துகளைத் தெரி­வித்­துள்ளார்.

இதற்­கி­டையே, ரஜினி தனது அர­சி­யல் நிலையை தெளி­வாக சொல்­லி­விட்­டார் என்று தேமு­திக பொரு­ளா­ளர் பிரே­ம­லதா விஜ­ய­காந்த் கூறி­னார்.

பூந்­த­மல்­லி­யில் தேமு­திக நிர்­வாகி இல்­லத் திரு­மண வர­வேற்பு நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பிரே­ம­லதா பேசினார்.

"நடி­கர் ரஜி­னி­காந்த் ரொம்ப நல்ல மனி­தர்.

"எங்­கள் கட்­சிக்­கும் அவர் மீது மிகப் பெரிய மரி­யாதை இருக்­கிறது. அர­சி­யல் குறித்து தன்­னு­டைய நிலை­ப்பாட்டை அவர் தெளி­வாக சொல்லி விட்­டார். ஊட­கங்­கள் தான் இதனை பெரி­து­ப­டுத்தி வரு­கின்­றன," என்­றார்.

ஆனால் நடி­கர் எஸ்.வி. சேகர், "ரஜினி சொல்­வது நிஜத்­தில் நடக்­காது. இந்­தி­யா­வில் புரட்­சி­யும் வெடிக்­காது. ரஜினி சொல்­வ­து எல்லாம் புஸ்­வா­ண­மாகி விடும். கட்சி, ஆட்சி என இரண்டும் இரு­வர் கையில் இருந்­தால் முத­லில் கட்சியும் சின்­னமும் முடங்­கும்," என்று கூறி­யுள்­ளார்.