லாரி- கார் மோதி 6 பேர் அதே இடத்தில் பலி

லாரி- கார் மோதி 6 பேர் அதே இடத்தில் பலி

1 mins read
6357253c-5f8b-4ecc-b31a-4e3fdd29e5f0
விபத்தில் சிக்கிய காருக்கு இந்தக் கதி ஏற்பட்டது. இதில் இருந்த ஆறு பேரும் நசுங்கி மாண்டனர். படம்: தமிழக ஊடகம் -

நாமக்­கல்: நாமக்­கல் அருகே நள்­ளி­ர­வில், லாரி- கார் நேருக்கு நேர் மோதிக்­கொண்ட கோர விபத்­தில், ஆறு தொழி­லாளர்கள் சம்­பவ இடத்­தி­லேயே உடல் நசுங்கி உயி­ரி­ழந்­த­னர்.

நாமக்­கல்­லில் இருந்து திருச்­சிக்கு செங்­கல் ஏற்­றிச் சென்ற லாரி­யும் திருச்­சி­யில் இருந்து நாமக்­கல் நோக்கி வந்த டாடா சுமோ காரும் திருச்சி செல்­லும் சாலை­யில் சின்­ன­வேப்­ப­நத்­தம் பகு­தி­யில் வெள்­ளிக்­கி­ழமை நள்­ளி­ர­வில் நேருக்கு நேர் மோதிக்­கொண்­டன.

இரு வாக­னங்­களும் கடு­மை­யாக சேதம் அடைந்­தன. காரில் இருந்த ஆறு பேரும் மாண்­ட­னர். அவர்­க­ளின் சட­லங்­கள் மீட்­கப்­பட்டு நாமக்­கல் அரசு மருத்­து­வ­ம­னைக்கு பிரே­தப் பரி­சோ­த­னைக்­காக அனுப்­பி­வைக்­கப்­பட்­டன.

மாண்­ட­வர்­களில் இரு­வர் நாமக்கல் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள். நால்­வர் பீகார் மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர்­கள். அவர்­கள் திருச்சி மாவட்­டம் காட்­டுப்­புத்­தூ­ரில் கட்­டட வேலை­யில் ஈடு­பட்டு வந்­த­னர்.

விபத்து நிகழ்ந்­த­தும் லாரி ஓட்டு­நர் தப்­பி­விட்­டார். அவரை போலிஸ் தேடு­கிறது. தூக்­கக்­க­லக்­கத்­தில் வாக­னம் ஓட்­டி­யதே விபத்­துக்குக் கார­ணமாகத் தெரிகிறது என்று போலிஸ் தெரிவித்தது.