தமிழ் வழியில் படித்திருந்தால் அரசுப்பணியில் முன்னுரிமை

1 mins read
62bf48b3-93ad-439b-a9a1-b7fe0b695f06
பட்­டப்­ப­டிப்பை மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்­பு­க­ளி­லும் தமிழ் வழி­யில் படித்­தி­ருந்­தால் அர­சுப்­ப­ணி­யில் முன்­னு­ரிமை வழங்க வழி­வகை செய்­யும் சீர்திருத்த மசோதா சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று தாக்­கல் செய்­யப்­பட்­டது.  படம்: ஊடகம் -

சென்னை: பட்­டப்­ப­டிப்பை மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்­பு­க­ளி­லும் தமிழ் வழி­யில் படித்­தி­ருந்­தால் அர­சுப்­ப­ணி­யில் முன்­னு­ரிமை வழங்க வழி­வகை செய்­யும் சீர்திருத்த மசோதா சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று தாக்­கல் செய்­யப்­பட்­டது.

சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று மானி­யக் கோரிக்­கை­க­ளின் மீதான விவா­தத்­திற்கு இடையே தமிழ் வ­ழிக்கல்­விக்கு முன்­னு­ரிமை அளிக்­கும் திருத்த மசோதா தாக்­கல் செய்­யப்பட்­டது.

தமி­ழக அர­சுப் பணி­யா­ளர், நிர்­வாக சீர்­தி­ருத்­தத் துறை அமைச்­சர் டி. ஜெயக்­கு­மார் இதனை சட்­ட­ச­பை­யில் தாக்­கல் செய்­தார்.

முன்­ன­தாக தமிழ்­வ­ழி­யில் பட்­டப்­ப­டிப்பு படித்­தி­ருந்­தால் தமி­ழக அர­சுப்­ப­ணி­களில் 20% முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டது.

நேற்று தாக்­கல் செய்த மசோ­தா­வின்­படி இனி பட்­டப்­ப­டிப்பு மட்­டு­மின்றி 10, 12ஆம் வகுப்புகளி­லும் தமிழ் வழி­யில் படித்­தி­ருந்­தால் மட்­டுமே அர­சுப்­ப­ணி­யில் முன்­னு­ரிமை வழங்­கப்­படும்.

அதா­வது, பட்­டப்­ப­டிப்பு தகு­திக்கான அர­சுப்­ப­ணிக்கு பட்­டப் படிப்­பு­டன் 10, 12ஆம் வகுப்­பு­க­ளை­யும் தமிழ்­வ­ழி­யில் படித்­தி­ருக்க வேண்­டும். அதே­போன்று 10ஆம் வகுப்பு தகு­தி­யுள்ள அர­சுப்­ப­ணிக்கு 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் வ­ழிக்­கல்­வி­யில் பயின்றிருக்கவேண்­டும் என்று மசோ­தா­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

வார விடு­மு­றைக்கு பின்பு நேற்று கூடிய சட்­டப்­பே­ர­வை­யில் தமிழ்வழிக் கல்­வி­க்கு முன்­னு­ரிமை அளிக்­கும் சீர்­தி­ருத்த மசோதா நேற்று தாக்­கல் செய்­யப்­பட்­டது.

மகா­ராஷ்­டி­ரம், ஆந்­திரா உள்­ளிட்ட பல மாநி­லங்­களில் தங்­கள் மாநி­லத்­தில் உள்­ள­வர்­களுக்கு முன்­னு­ரிமை அளிக்­கும் மசோதா நிறை­வேற்­றப்­பட்டு சட்­ட­மாக்­கப்பட்­டுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.