தமிழகத்தில் தமிழைக் கட்டாய பாடமாக்க நடவடிக்கை தேவை என்கிறார் ராமதாஸ்

2 mins read
865fbd74-8468-4138-823e-9d4aab67b76a
-

சென்னை: தமிழ்­நாட்­டில் அனைத்து கல்வி வாரி­யப் பள்­ளி­க­ளி­லும் பத்­தாம் வகுப்பு வரை தமி­ழைக் கட்­டா­யப் பாடம் ஆக்க வேண்­டும் என பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் வலி­யு­றுத்தி உள்­ளார்.

தமி­ழ­கத்­தில் உள்ள தனி­யார் பள்­ளி­கள் தமி­ழ­னுக்கு செய்­யும் துரோ­கம் மன்­னிக்க முடி­யா­தது என்று அறிக்கை ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும் தமி­ழைக் கட்­டா­யப் பாட­மாக்­காத சிபி­எஸ்இ பள்­ளி­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி உள்ள அவர், தமி­ழ­கத்­தின் அண்டை மாநி­லங்­க­ளான ஆந்­திரா, தெலுங்­கானா, கேரளா, கர்­நா­டகா உட்­பட இந்­தி­யா­வின் பெரும்­பான்­மை­யான மாநி­லங்­களில் அந்­தந்த மாநில மொழி­கள் கட்­டா­யப் பாட­மாக்­கப்பட்­டுள்­ள­தைச் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

"பிற மாநி­லங்­களில் அங்­குள்ள மாநி­லக்­கல்வி வாரிய பாடத்­திட்ட பள்­ளி­களில் மட்­டு­மின்றி, சிபி­எஸ்இ, ஐசி­எஸ்இ பாடத்­திட்­டம், சிஐ­எஸ்­சிஇ பாடத்­திட்­டம், கேம்­பி­ரிட்ஜ் வாரி­யப் பாடத்­திட்­டம் ஆகிய பாடத்­திட்­டங்­களை கடை­பி­டிக்­கும் பள்­ளி­க­ளி­லும் மாநில மொழிப் பாடம் கட்­டா­ய­மா­கும். மாநில மொழிப் பாடத்தை கற்­பிக்க மறுக்­கும் பள்­ளி­க­ளுக்கு பல்­வேறு வித­மான தண்­ட­னை­களை வழங்­க­வும் அந்த மாநி­லங்­க­ளின் உள்­ளூர் மொழி கட்­டா­யப்­பாட சட்­டம் வகை செய்­கிறது," என்று ராம­தாஸ் தெரி­வித்­துள்­ளார்.

தமிழ்நாட்டில் மொத்தம் 624 சிபிஎஸ்இ பள்ளிகள் இருப்பதாகவும், மற்ற பாடத்திட்டங்களைக் கடைபிடிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

"அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 7 லட்சம் ஆகும். தமிழ்நாட்டில் இவ்வளவு பெருந்தொகையான மாணவர்கள் தமிழை படிக்காமல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்வதை அனுமதிக்கக் கூடாது.

"எனவே, தமிழகத்திலுள்ள சிபிஎஸ்இ மற்றும் பிற கல்வி வாரிய பள்ளிகள் தமிழை கட்டாயப் பாடமாக கற்பிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழை கற்பிக்க மறுக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் மேலும் வலியுறுத்தி உள்ளார்.