வைகோ: சமசுகிருத மொழிச் சட்டம் பெரும் கேடு விளைவிக்கும்

வைகோ: சமசுகிருத மொழிச் சட்டம் பெரும் கேடு விளைவிக்கும்

2 mins read
968bf6f7-a0f0-424a-944e-737b4644c6e9
உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நீதிமன்ற மொழியாக ஆங்கிலத்தைத் தவிர இந்தியும் இருப்பதைப் போல்,  தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளையும் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வைகோ பேசினார். படம்: ஊடகம் -

புது­டெல்லி: சம­சு­கி­ருத மொழிச் சட்­டத்தை தாம் கடு­மை­யாக எதிர்ப்­ப­தாக மதி­முக பொதுச் செய­லர் வைகோ தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் மாநி­லங்­க­ள­வை­யில் உரை­யாற்­றிய அவர், இந்­தி­யா­வில் உள்ள அனைத்து மொழி­க­ளை­யும் ஒழித்­துக்­கட்­டு­கின்ற ஒரே நோக்­கத்­து­டன், இந்­தச் சட்­டத்­தைக் கொண்டு வந்­தி­ருப்­ப­தா­கக் குற்­றம்­சாட்­டி­னார்.

இது பெருங்­கேடு விளை­விக்­கின்ற அழி­வுச் சட்­டம் என்று குறிப்­பிட்ட அவர், நாடு முழு­வ­தை­யும் சம­சு­கி­ருத மய­மாக்கி, பிற மொழி­க­ளுக்கு இங்கே இடம் இல்லை எனச் சொல்­கின்ற முயற்சி இது என்­றும், இது இந்­தி­யா­வைத் துண்­டு­துண்­டாக ஆக்­கி­வி­டும் என்­றும் தெரி­வித்­தார்.

"இந்­தி­யா­வின் அனைத்து மொழி­க­ளின் வளர்ச்­சிக்­கும் இந்த அரசு ஒதுக்கி இருக்­கின்ற ஒட்­டு­மொத்­தத் தொகையைவிட 22 மடங்கு கூடு­தல் பணத்தை சம­சு­கி­ரு­தம் என்ற ஒரே மொழி­யின் வளர்ச்­சிக்­காக ஒதுக்கி இருக்­கின்­றார்­கள். இந்த அவை­யில் இருக்­கின்ற மராத்தி, குஜ­ராத்தி, ஒடியா, பஞ்­சாபி மற்­றும் ஏனைய மொழி­க­ளைப் பேசு­வோர், இதை ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா?" என்று கேள்வி எழுப்­பி­னார் வைகோ.

இந்­தச் சட்­டம் நிறை­வேற்­றப்­பட்­டால் எதிர்­கா­லத்­தில் சம­சு­கி­ரு­த­மும் இந்­தி­யும் தென்­னிந்­திய மொழி­களை மட்­டும் அல்ல, ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வின் ஏனைய மொழி­கள் அனைத்­தை­யும் அழித்­து­வி­டும் என்று அவர் சாடி­னார்.

சம­சு­கி­ருத மொழியை எழு­தப் பேசப் படிக்­கத் தெரி­யும் என ஒரு சான்­றி­த­ழைக் கொடுக்­கும் பட்­சத்­தில், ஒரு மாண­வன் 10 அல்­லது 12ஆம் வகுப்­பில் நேர­டி­யா­கச் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வார் என்று குறிப்­பிட்ட அவர், அம்­மா­ண­வர், இயற்­பி­யல், வேதி­யி­யல், வர­லாறு, புவி­யி­யல் என வேறு எந்­தப் பாடத்­தை­யும் படிக்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை எனச் சுட்­டிக்­காட்­டி­னார்.

"சம­சு­கி­ருத மொழியை வளர்ப்­ப­தற்­காக, 643.24 கோடி செல­வில் தேசிய சம­சு­கி­ரு­தக் கல்­லூ­ரி­யைத் தொடங்­கி­னார்­கள்.

"ஆனால், எங்­கள் செம்­மொழி தமிழ் ஆய்வு நிறு­வ­னத்­திற்­குக் கடந்த ஆண்டு வழங்­கி­யது வெறும் 4 கோடி 65 லட்­சம்­தான். கடந்த மூன்று ஆண்­டு­களில் வழங்­கிய ஒட்­டு­மொத்­தத் தொகை வெறும் 21 கோடி­தான்.

"இந்­தச் சட்ட முன்­வ­ரைவு நாடா­ளு­மன்­றத்­தில் ஏற்­கப்­பட்டு, சட்­ட­மா­னால் அது இந்­திய ஒற்­று­மையை உடைத்­துத் துண்­டு­துண்­டாக்கி விடும். மக்­கள் ஆட்­சிக் கோட்­பாட்டை ஆழக்­குழி தோண்­டிப் புதைத்­து­வி­டும் என எச்­ச­ரிக்­கின்­றேன்," என்­றார் வைகோ.