தமிழகத்தில் யாருக்கும் கொரோனா கிருமி தொற்று இல்லை: அமைச்சர் திட்டவட்டம்

தமிழகத்தில் யாருக்கும் கொரோனா கிருமி தொற்று இல்லை: அமைச்சர் திட்டவட்டம்

2 mins read
f76a69a2-a3f2-4edc-885a-d040eef9c0e4
-

சென்னை: கொரோனா கிருமித் தடுப்பு நட­வ­டிக்­கைக்­காக தமி­ழக அரசு ரூ.60 கோடி ஒதுக்கி இருப்­ப­தாக சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்ட ஒரே ஒரு நப­ரும் குண­ம­டைந்து விட்­ட­தாக அவர் சட்­டப்­பே­ர­வை­யில் பேசும்­போது குறிப்­பிட்­டார்.

தற்­போது தமி­ழ­கத்­தில் கொரோ­னா­வால் யாரும் பாதிக்­கப்­ப­ட­வில்லை என்­றார் அமைச்­சர்.

"இந்­தி­யா­வில் இரு­வர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். ஆனால் தமி­ழ­கத்­தில் காஞ்­சீ­பு­ரத்தை சேர்ந்த பொறி­யி­ய­லா­ளர் ஒரு­வ­ருக்கு மட்­டும் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு இருந்­தது. அவர் சென்னை அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சை­யில் இருந்­தார். தற்­போது அவ­ரும் குண­ம­டைந்­து­விட்­டார். இந்த நிமி­டம் வரை தமி­ழ­கத்­தில் கொரோ­னா­வால் வேறு யாரும் பாதிக்­கப்­ப­ட­வில்லை.

"உலக சுகா­தார நிறு­வ­னம் 60 அல்ல 70 வய­துக்கு மேல் உள்­ள­வர்­கள் தான் வெளி­யில் செல்ல வேண்­டாம், கவ­ன­மாக இருக்க வேண்­டும் என்று கூறி­யுள்­ளது.

"நிச்­ச­ய­மாக தமி­ழக அரசு மக்­களை காப்­பாற்­றும். முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் எடுக்­கும் வித­மாக முதல்­வர் ஆலோ­சனை நடத்­தி­யுள்­ளார். எனவே மக்கள் கவலையடைய வேண்டாம்," என்றார் அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர்.

இதற்­கி­டையே தமி­ழ­கம் முழு­வ­தும் பொது­மக்­கள் முகக்­க­வ­சங்­களை வாங்­கு­வது அதி­க­ரித்­துள்­ளது. இத­னால் அவற்­றின் விலை அதி­க­ரித்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து முகக்­க­வ­சங்­களை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது சட்டப்படி நட­வ­டிக்கை பாயும் என தமி­ழக அரசு கடுமையாக எச்­ச­ரித்­துள்­ளது.

இதற்­கி­டையே டாஸ்­மாக் மதுக்­க­டை­களில் பணி­யாற்­றும் ஊழி­யர்­க­ளுக்கு முகக்­க­வ­சம் வழங்க உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்று டாஸ்­மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்­கு­நர் ஆர்.கிர்லோஷ்­கு­மார் தெரி­வித்­துள்­ளார்.