சென்னை: ஒரேநாளில் 38 விமானம் ரத்து

சென்னை: ஒரேநாளில் 38 விமானம் ரத்து

2 mins read
6e1207a0-efab-417f-bf77-f496f18bac55
-

ஆலந்­தூர்: உல­க­நா­டு­களை கொரோனா கிருமி அச்­சம் ஆட்­டிப் படைத்து வரும் வேளை­யில், சென்னை விமான நிலை­யத்­துக்கு வந்து செல்­லும் அனைத்­து­லக விமா­னங்­கள், உள்­நாட்டு விமா­னங்­கள் என மொத்­தம் 38 விமா­னச் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­டன.

உலக நாடு­களில் இந்த கொரோனா கிரு­மி­யின் தாக்­கத்­துக்கு நேற்று மாலை வரை 8,160 பேர் உயி­ரி­ழந்­த­தாகவும் தக­வல்­கள் தெரி­வித்­தன.

இந்நிலையில் போது­மான அள­வில் பய­ணி­கள் இல்­லா­மல் விமா­னங்­க­ளின் போக்குவரத்து பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், சென்னை மீனம்­பாக்­கம் பன்­னாட்டு விமான நிலை­யம் பய­ணி­கள் இன்றி வெறிச்­சோடிக் காணப்­ப­டு­கிறது.

போதிய பய­ணி­கள் இல்­லா­த­தால் நேற்று ஒரே­நா­ளில் 38 விமா­னச் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­ட­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இலங்­கை­யில் இருந்து 3 விமா னங்­கள், குவைத்­தில் இருந்து 3, தாய்­லாந்து, மலே­சி­யா­வில் இருந்து தலா 2, தோகா, சிங்­கப்­பூர், ரியாத், துபாய், மஸ்­கட் ஆகிய நாடு­களில் இருந்து தலா ஒரு விமா­னம் என 15 விமா­னங்­களும் அதே­போல் சென்­னை­யில் இருந்து புறப்­பட்­டுச் செல்­லும் 15 விமா­னங்­கள் என ஆக மொத்­தம் 30 அனைத்­து­லக விமா­னச் சேவை­கள் ரத்­தாகின.

அத்­து­டன் போதிய பய­ணி­கள் இல்­லா­மல் சென்­னை­யில் இருந்து பெங்­க­ளூரு, ஹைத­ரா­பாத், கொச்சி, மும்பை ஆகிய இடங்­க­ளுக்­குச் செல்­லும் 4 உள்­நாட்டு விமா­னங்­களும் இந்த நக­ரங்­க­ளி­லி­ருந்து சென்­னைக்கு வரும் 4 உள்­நாட்டு விமா­னங்­கள் என 8 உள்­நாட்டு விமா­னச் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.

கொரோனா கிருமி பர­வ­லின் தாக்­கம் அதி­க­ரித்து வருவதன் காரணமாக பல ­நா­டு­க­ளி­லும் சுற்­றுலா விசா தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏப்­ரல் 14 வரை வெளி­நாட்­டுப் பய­ணி­க­ளுக்கு விசா வழங்­கு­வதை நிறுத்தி வைத் துள்ளனர்.

விமா­னப் பய­ணங்­கள் மூல­மாக கொரோனா கிருமி பர­வக்­கூ­டிய வாய்ப்­பு­கள் அதி­க­மாக இருப்­ப­தால் சென்னை மீனம்­பாக்­கம் விமான நிலை­யத்­தில் நவீன சோதனைக் கரு­வி­க­ளைக் கொண்டு பயணி களைச் சோதித்து வரு­கின்­ற­னர்.

பன்­னாட்டு முனை­யத்­தில் பணி யாற்­றும் அதி­கா­ரி­கள் முதல் ஊழி யர்­கள் வரை முகக்­க­வ­சங்­களை அணிந்தே பணி­யாற்­று­கின்­ற­னர்.

விமா­னங்­களில் கொரோனா கிருமி பர­வக்­கூ­டும் என்ற பீதி­யால் விமா­னங்­களில் பய­ணம் செய்­ப­வர் களின் எண்­ணிக்கை குறைந்து இருப்­ப­தாக அதி­கா­ரி­கள் தெரி வித்­த­னர்.