பல நாட்டு நோயாளிகளுக்கும் தமிழக வல்லுநர்கள் சிகிச்சை

பல நாட்டு நோயாளிகளுக்கும் தமிழக வல்லுநர்கள் சிகிச்சை

3 mins read
63dd475b-ba35-4877-95d7-5fb11991f7dc
தமிழக சுகாதார அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர், எழும்பூர் ரயில் நிலையத்தில், ஒரு ரயிலில் பயணிகளிடம் கொரோனா தடுப்பு துண்டுப் பிரசுரம் மூலம் ஆலோசனை கூறினார். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: உல­கையே மிரட்டி வரும் கொலை­கார கொரோனா கிரு­மியை இரண்­டில் ஒன்று பார்த்து­வி­டும் நோக்­கத்­து­டன் தமி­ழக அரசு முழு­மூச்­சா­கக் களத்­தில் குதித்து இருக்­கிறது.

அதே­வே­ளை­யில், பல வெளி­நா­டுகளிலும் உள்ள கொரோனா நோயா­ளி­க­ளுக்குத் தமி­ழக சிறப்பு வல்­லு­நர்­கள், மாநி­லத்­தில் இருந்த படியே ஸ்கைப் இணை­யச் செயலி மூலம் சிகிச்சை அளித்து வரு­கி­றார்­கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா உல­கில் பல நாடு­க­ளி­லும் பேயாட்­டம் போட்டு வரு­கிறது என்­றா­லும் தமிழ்­நாட்­டில் அந்­தக் கிரு­மி­க­ளின் ஜம்­பம் இது­நாள் வரை பலிக்­க­வில்லை.

அந்த மாநி­லத்­தில் இது­வ­ரை­யில் 1.89 லட்­சம் மக்­கள் பரி­சோ­திக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள். அவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் அனைத்­து­ல­கப் பய­ணி­கள்.

222 பேரின் ரத்த மாதி­ரி­கள் பரி­சோ­த­னைக்கு அனுப்­பப்­பட்­ட­தில் இதுவரை மூன்றே மூன்று பேருக்கு மட்­டுமே கொரோனா கிருமி பாதிப்பு தெரி­ய­வந்­தது.

அவர்­களில் 45 வய­தான ஒரு­வர் பூரண குண­ம­டைந்­து­விட்­டார். வட­இந்­தி­யா­வில் இருந்து வந்த ஒரு­வ­ருக்கும் அயர்லாந்தில் இருந்து வந்த மற்றோருவருக்கும் இப்­போது தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

உத்­தி­ரப்பிர­தேச மாநி­லத்­தில் இருந்து சென்னை வந்­த­வ­ருக்கு கொரோனா கிருமி பாதிப்பு இருப்­பது தெரி­ய­வந்­ததை அடுத்து அவர் சென்னை அரசு மருத்­து­வ­ம­னை­யில் தீவி­ர­மா­கக் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றார்­.

அவ­ருக்குக் கிரு­மி­ எப்­படி தொற்­றியது என்­பது தெரி­யா­த­தால் தமிழ்­நாட்­டில் சமூக தொற்­று­நோ­யாக கொரோனா மாறி­வி­டுமோ என்ற அச்­சம் தலை­தூக்கியுள்ளது.

இருந்தாலும் எந்த அச்­ச­மும் அறவே தேவை­யில்லை என்று அர­சாங்­கம் பொது­மக்­க­ளுக்­கு உறுதி அளித்துள்ளது. வெளி­நா­டு­களில் இருந்து திரும்­பி­ய­வர்­களில் சுமார் 3,000 பேர் வீட்­டி­லேயே தனித்து வைக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

கொரோனா கிரு­மியை எதிர்த்து களத்­தில் குதித்­துள்ள அரசு, போலி செய்­தி­கள் பர­வு­வ­தைத் தடுக்­க­வும் கடுமையாகப் போராடி வருகிறது.

நாட்­டில் முகக்­க­வ­சம் போன்ற வையும் இதர மருத்­துவச் சாத­னங்­களும் போதிய அள­வுக்கு இருப்­ப­தாக தெரி­வித்து உள்­ள அரசாங்கம், வதந்­தி­களை நம்பி தேவைக்கு அதிகமாக ­பொருட்­களை வாங்க வேண்­டாம் என்­றும் மக்களுக்கு ஆலோ­சனை கூறி உள்­ளது.

போலி செய்­தி­க­ளைப் பரப்­பிய மூவர் மயி­லா­டு­துறை உள்­ளிட்ட நகர்­களில் கைதாகி இருக்­கி­றார்­கள். மாநி­லம் முழு­வ­தும் அரசு, தனி­யார் வாக­னங்­கள் நாள் ஒன்­றுக்கு இரண்டு தடவை பூச்சு மருந்து அடித்து சுத்­தப்­ப­டுத்­தப்­படு­கின்­றன.

தமிழகம் முழு­வ­தும் உள்ள டீக்­கடை­கள் உள்­ளிட்ட உண­வ­கங்­கள் துப்­பு­ர­வைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று கடும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு உள்­ளது.

வழிபாட்டிடங்கள், திரை­ய­ரங்­கு­கள், சமு­தா­யக் கூடங்­கள், கல்­விக் கூடங்­கள் எல்­லாம் மார்ச் 31 வரை மூடப்­பட்டு உள்­ளன. பொது நிகழ்ச்­சி­கள் தவிர்க்­கப்­பட்டு வரு­கின்­றன.

மருத்­து­வச் சாத­னங்­களை அதிக விலை­யில் விற்ற கடை­கள் இழுத்து மூடப்­பட்டு வரு­கின்­றன. தமி­ழ­கம் முழு­வ­தும் பொது இடங்­களில் கூட்­டம் குறைந்துள்ளது.

இத­னால் பல ரயில், பேருந்து சேவை­கள் ரத்­தாகி வரு­கின்­றன. சென்னை விமான நிலை­யத்­தில் நேற்று மட்­டும் 84 விமா­னச் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­டன.

தமிழ்­நாட்­டில் செயல்­படும் ஏறத்­தாழ 10 லட்­சம் சிறு, குறு தொழில் நிறு­வ­னங்­களில் பல­வும் பாதிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவற்­றில் பணி­யாற்­றும் 80 லட்­சம் பேருக்­கும் அதிக ஊழி­யர்­கள் கவலை அடைந்­துள்­ள­தா­க­வும் தெரிகிறது.

இவ்­வே­ளை­யில், கொரோனா கிரு­மி­யைக் கண்­ட­றி­வ­தற்­காக சென்னை ராஜீவ்­காந்தி அரசு மருத்­து­வ­ம­னை­யில் நேற்று ஐந்­தா­வது பரி­சோ­தனை மையம் செயல்­ப­டத் தொடங்­கி­யது. மேலும் மையங்கள் அமைக்­கப்­படும் என்றார் அமைச்சர்.