தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதல்வர்: தமிழ்நாடு நீர்மிகு மாநிலமாவதே என்னுடைய இலக்கு

2 mins read
9206bf6e-31db-460a-b490-1f76f8237124
படம்: ஊடகம் -

சென்னை: தமிழ்­நாட்டை நீர்­மிகு மாநி­ல­மாக ஆக்­கு­வதே தன்­னு­டைய இலக்கு என்று முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி சட்­ட­மன்­றத்­தில் அறி­வித்­தார்.

அந்த இலக்கை நிறை­வேற்ற அரசு தன்­னால் ஆன அனைத்­தை­யும் செய்­யும் என்று அவர் உறுதி கூறி­னார்.

இருந்­தா­லும் இந்த முயற்­சி­யில் கட்சி பேத­மின்றி எல்­லா­ரும் உறு­து­ணை­யாக இருந்து கைகொ­டுக்க வேண்­டும் என்று அவர் வேண்­டு­கோள் விடுத்­தார்.

"தமிழ்­நாட்­டில் மின்­சா­ரப் பற்­றாக்­குறை நில­வி­யது. தமிழ்­நாட்டை மின்­மிகு மாநி­ல­மாக ஆக்­க­வேண்­டும் என்று அதி­முக தலைவி சூளு­ரைத்­தார். அதை அவர் செய்­தும் காட்­டி­னார். அதை­ய­டுத்து இப்­போ­தைய அரசு, ஜெய­ல­லி­தாவைப் பின்­பற்றி தமிழ்­நாட்டை நீர்­மிகு மாநி­ல­மாக மாற்ற வேண்­டும் என்று இலக்கு நிர்­ண­யித்து உள்­ளது," என்­றார் முதல்­வர்.

தமிழ்­நாட்­டில் நில வளங்­கள் இருந்­தும் போதிய நீர்­வ­ளம் இல்­லா­த­தால் பருவ மழையை நம்­பியே மாநி­லம் காலம் தள்ள வேண்டி இருக்­கிறது. கேரளா, கர்­நா­ட­கம், ஆந்­திரா ஆகிய பக்­கத்து மாநி­லங்­க­ளைச் சார்ந்து இருக்க வேண்­டிய சூழ்­நி­லை­யும் தமி­ழ­கத்­துக்கு இருந்து வரு­கிறது.

சட்­ட­மன்­றத்­தில் பொதுப் பணித்­துறை மானி­யக் கோரிக்கை பற்­றிய விவா­தத்­தில் பேசிய முதல்வர், கோதா­வரி-காவேரி இணைப்பு தொடர்­பில் நல்ல முடிவு எடுக்­கப்­படும் என்று நம்­பிக்கை தெரி­வித்­தார்.

மாநி­லத்­தில் ரூ. 692 கோடி செல­வில் 133 தடுப்­ப­ணை­கள் கட்­டப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

முல்லைப் பெரி­யாறு அணைத் தொடர்­பான பிரச்­சினை விரை­வில் தீர்க்­கப்­படும் என்­றும் முதல்வர் தெரி­வித்­தார்.

தான் மக்­க­ளுக்­கான சேவ­கன் என்று குறிப்­பிட்ட பழனிசாமி, விவசாயக் குடும்­பத்­தில் பிறந்த தன்­னு­டைய இலக்கு தமி­ழ­கத்தை நீர் மிகு மாநி­ல­மாக மாற்­று­வ­து­தான் என்­றும் உறுதிபட கூறினார்.

இதையொட்டி தஞ்சாவூர், தர்மபுரி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் ரூ. 500 கோடி செலவில் நீரேற்றுப் பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார் முதல்வர்.