சென்னை: துப்புரவுத் தொழிலாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்கப்படுவர் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை தமிழக முதல்வர் நேற்று வெளியிட்டார். அதில் தமிழகத்தில் இனி துப்புரவுத் தொழிலாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
மாநிலத்தில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12,525 கிராம ஊராட்சிகளில் மொத்தம் 64, 583 துப்புரவுப் பணியாளர்கள் தூய்மைப் பணியை செய்து வருகிறார்கள்.
இவர்களைச் சிறப்பிக்கும் வகையில் பெயர் மாற்றம் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

