கிருஷ்ணகிரி: சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்ததால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பத்து வாகனங்கள் தீக்கிரையாகின.
பெங்களூரு அருகே உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களை வைக்கும் கிடங்கு செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அக்கிடங்களில் இருந்து 450 கிலோ எடை கொண்ட மிகப் பெரிய சிலிண்டர் ஒன்று ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டது.
சிலிண்டருடன் வந்த வாகனம் காலை சுமார் 11.30 மணியளவில் ஓசூர் அருகே அலசநத்தம் பகுதியை நெருங்கிய போது, மேடு, பள்ளமான சாலையைக் கடக்க வேண்டியிருந்தது. இதனால் வாகனம் பலமுறை குலுங்கியதில், வாகனத்தில் இருந்த சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்துள்ளது.
இதனால் பயந்து போன ஓட்டுநர், வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டம்பிடித்தார். வேகமாக கசிந்த எரிவாயு, அப்பகுதியில் இருந்த கடைகளுக்குப் பரவியது. இதனால் அக்கடைகளில் தீப்பிடித்தது.
கோழிக்கடை, சாப்பாட்டுக்கடை என கடைவீதி முழுவதும் பொருட்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அனைவரும் ஓட்டம்பிடித்தனர்.
இதில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். கடைவீதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றும், 9 இருசக்கர வாகனங்களும் தீக்கிரையாகின.
ஒரே நேரத்தில் கடைவீதியின் இருபுறமும் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.

