நளினி கோரிக்கை: நீதிமன்றம் புது உத்தரவு

நளினி கோரிக்கை: நீதிமன்றம் புது உத்தரவு

2 mins read
d45bbc36-0c50-4810-adfd-27176d70420a
தமி­ழக ஆளு­ந­ரின் ஒப்­பு­தல் இல்­லா­ம­லேயே தன்னை விடு­விக்க வேண்­டும் என்று ராஜீவ்­காந்தி கொலை வழக்­கில் தண்­டனை பெற்­றுள்ள நளினி கோரி­யுள்­ளார். கோப்புப் படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழக ஆளு­ந­ரின் ஒப்­பு­தல் இல்­லா­ம­லேயே தன்னை விடு­விக்க வேண்­டும் என்று ராஜீவ்­காந்தி கொலை வழக்­கில் தண்­டனை பெற்­றுள்ள நளினி கோரி­யுள்­ளார்.

இது தொடர்­பாக சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் அவர் தாக்­கல் செய்­துள்ள மனு விசா­ர­ணைக்கு உகந்­ததா என நீதி­ப­தி­கள் விரை­வில் முடிவு செய்ய உள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் நடந்த முதற்­கட்ட விசா­ர­ணை­யின் போது நளினி சார்­பில் முன்­னி­லை­யான வழக்­க­றி­ஞர் ராதா­கி­ருஷ்­ணன் தன்னை முன்­கூட்­டியே விடு­விக்­கக் கோரி நான்­கா­வது முறை­யாக நளினி மனுத்­தாக்­கல் செய்­தி­ருப்­ப­தாக குறிப்­பிட்­டார்.

மேலும், இந்­தி­யா­வி­லேயே 28 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சிறை­யில் இருப்­ப­வர்­கள் நளினி உள்­ளிட்ட ராஜீவ்­காந்தி கொலை வழக்­கில் தண்­டனை பெற்ற ஏழு பேரா­கத்­தான் இருக்க முடி­யும் என்று அவர் தெரி­வித்­தார்.

"அர­சி­ய­ல­மைப்­புச் சட்ட விதி­க­ளின்­படி, மாநில ஆளு­நர் கட­மை­யாற்ற தவ­றும்­போது, நீதி­மன்­றம் தலை­யிட்டு தீர்வுகாண வேண்­டும். ஏற்­கெ­னவே ஏழு பேர் விடு­தலை தொடர்­பாக தமி­ழக அரசு முடிவு எடுக்­க­லாம் என்று உச்ச நீதி­மன்­றம் கூறி­யுள்­ளது.

"தர்­ம­புரி பேருந்து எரிப்பு வழக்­கில் ஆயுள் தண்­டனை பெற்­ற­வர்­களை விடு­விக்க ஆளு­ந­ரி­டம் ஒப்­பு­தல் பெற்ற தமி­ழக அரசு, இந்த ஏழு பேர் விடு­த­லைக்­காக இது­வரை ஆளு­ந­ருக்கு அழுத்­தம் கொடுக்­க­வில்லை. ஆளு­ந­ரின் செயல்­பாடு அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­துக்கு விரோ­த­மா­னது," என்று வழக்­க­றி­ஞர் ராதா­கி­ருஷ்­ணன் வாதிட்­டார்.

இதை­ய­டுத்து இந்த வழக்­கின் விசா­ர­ணையை ஏப்­ரல் 7ஆம் தேதிக்கு நீதி­ப­தி­கள் ஒத்­தி­வைத்தனர்.

மேலும் நளினி கைது செய்­யப்­பட்ட நாள் முதல் அவரை விடு­விக்க அமைச்­ச­ரவை பரிந்­துரை செய்த நாள் வரை நடந்­துள்ள சம்­ப­வங்­கள் தொடர்­பான அனைத்து விவ­ரங்­க­ளை­யும் மனு­தா­ரர் தரப்பு வழக்கறிஞர் அறிக்­கை­யாக தாக்­கல் செய்­ய­ வேண்­டும் என்று உத்­த­ர­விட்­ட­னர்.