தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில்கள் ஓடாது என அறிவிப்பு

தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில்கள் ஓடாது என அறிவிப்பு

2 mins read
40a52c98-9203-4bee-b621-a1155cb5c56b
கொரோனா கிருமி பரவு­வதைத் தடுக்க தமி­ழ­க­மும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை அறி­வித்­துள்­ளது. இதன் ஒரு பகு­தி­யாக தமி­ழ­கம் முழு­வ­தும் பொதுப் பேருந்து, ரயில்­கள் ஓடாது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. படம்: ஊடகம் -

சென்னை: இந்­தி­யா­வில் கொரோனா கிருமி பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக இன்று நாடு முழு­வ­தும் ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. தொலைக்­காட்சி உரை­யில் பேசிய பிர­த­மர் மோடி, இந்த உத்­த­ரவை அனை­வ­ரும் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

இதை­ய­டுத்து அனைத்து மாநி­லங்­களும் ஊர­டங்கு உத்­த­ரவை அம­லாக்­கும் நட­வ­டிக்­கை­களில் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றன.

தமி­ழ­க­மும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை அறி­வித்­துள்­ளது. இதன் ஒரு பகு­தி­யாக தமி­ழ­கம் முழு­வ­தும் பொதுப் பேருந்து, ரயில்­கள் ஓடாது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் கொரோனா கிருமி தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு பொது­மக்­கள் முழு ஒத்­து­ழைப்பு அளிக்க வேண்­டும் என முதல்­வர் பழ­னி­சாமி வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இது தொடர்­பாக தமி­ழக முதல்­வர் நேற்று முன்­தி­னம் செய்­திக் குறிப்பு ஒன்றை வெளி­யிட்­டார்.

அதில் கொரோனா கிருமி பரவு­வதைத் தடுக்க பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுக்க பிர­த­மர் உத்­த­ர­விட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்டது.

"ஒன்­பது அம்ச நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள பிர­த­மர் அறி­வு­றுத்­தி­யுள்­ளார். இன்று காலை, 7:00 முதல் இரவு 9:00 மணி வரை பொது­மக்­கள் தாமா­கவே முன்­வந்து ஊர­டங்கு உத்­த­ரவை பின்­பற்ற வேண்­டும். கொரோனா கிருமி தடுப்பு பணி­களில் ஈடு­பட்­டுள்ள மருத்­து­வர்­கள், தாதி­கள், மருத்­து­வம் சார்ந்த பணி­யா­ளர்­கள், உள்­ளாட்­சிப் பணி­யா­ளர்­கள், ராணு­வம், விமான நிலை­யம் மற்­றும் பிற துறை பணி­யா­ளர்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கும் வகை­யில் 22ஆம் தேதி (இன்று) மாலை, 5:00 மணிக்கு மணி­யோசை வழி­யா­க­வும் கை தட்­டி­யும் நன்றி தெரி­விக்க வேண்­டும்.

"இன்று காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை போக்­கு­வ­ரத்து கழ­கங்­க­ளின் பேருந்­து­கள், தனி­யார் பேருந்­து­கள் மற்­றும் சிற்­றுந்­து­கள் எது­வும் இயங்­காது. மெட்ரோ ரயில்­களும் இயங்­காது. அனைத்து அரசு, தனி­யார் நுாலகங்­கள் 31ஆம் தேதி வரை மூடப்­படும். பிர­த­ம­ரின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க அரசு எடுத்து வரும் கொரோனா கிருமி நோய்த் தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு பொது­மக்­கள் முழு ஒத்­து­ழைப்பு அளித்து கிரு­மியை வெற்­றி­க­ர­மாக ஒழிக்க உதவ வேண்­டும்," என்று முதல்­வர் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே தமி­ழ­கத்­தில் மட்­டும் வீட்­டில் தனி­மைப்­ப­டுத்தி வைக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 4,253ஆக அதி­க­ரித்­துள்­ளது.

வெளி­நா­டு­களில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்­ளிட்ட விமான நிலை­யங்­க­ளுக்கு வரும் பய­ணி­கள் பரி­சோ­திக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

பயணிகளில் யாருக்காவது சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் படுகின்றனர்.

கிருமி அறிகுறிகள் இல்லாத வர்கள் சென்னை, திருச்சி, மதுரை, கோவை பகுதிகளில் ஏற்படுத்தப் பட்டுள்ள சிறப்பு முகாம்களில் 24 மணி நேரம் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

அதன்பின் அவர்கள் 14 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்படு கின்றனர்.

இவ்வாறு தமிழகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப் பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது 3481லிருந்து 4253க்கு அதிகரித்துள்ளது.