ஜப்பானியர்களிடம் ஆதார் அட்டைகள்

1 mins read
7bb759db-6d06-401a-a2c7-ea7ef4d2f0bc
ஜப்பானியர்கள் பெயரில் ஆதார் அட்டைகள். படம்: இந்திய ஊடகம் -

சென்னை: கும்­மி­டிப்­பூண்­டியை அடுத்­துள்ள எளா­வூர் ஏழு­கி­ணறு பகு­தி­யில் வரு­வாய் துறை­யி­ன­ரும் போலி­சா­ரும் நேற்று வாக­னச் சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர்.

மாவட்ட வரு­வாய் அலு­வ­லர் கந்­த­சாமி தலை­மை­யில் டிஎஸ்பி ரமேஷ், கும்­மி­டிப்­பூண்டி வட்­டாட்­சி­யர் குமார், வட்­டார மருத்­துவ அலு­வ­லர் டாக்­டர் கோவிந்­த­ராஜ் ஆகி­யோர் கொரோனா கிருமி பரவல் தடுப்பு சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர்.

அப்­போது கார் ஒன்றை சோதித்த போது காரில் பெண் உள்­ளிட்ட மூன்று ஜப்­பா­னி­யர்­கள் இருந்­த­னர்.

அவர்­க­ளி­டம் போலி­சார் விசா­ரணை நடத்­தி­னர். விசா­ர­ணை­யில் அவர்­கள் ஷின்யா ஹராடா(43), நசாரு நக­ஜிமா(57), மற்­றும் நஹுமி யமா­ஷிடா(40) என்ற பெண் என்­பது தெரி­ய­வந்­தது.

விசா­ர­ணை­யில் அவர்­கள் தமிழக எல்­லையை ஒட்­டிய ஆரம்­பாக்­கம் அருகே வசித்து வந்­தது தெரி­ய­வந்­தது.

விசா­ர­ணை­யில் பெங்­க­ளூரு மற்­றும் ஹரி­யானா குர்­கான் பகுதி முக­வ­ரி­யில் அவர்களிடம் ஆதார் அட்­டை­கள் இருந்தது தெரி­ய­வந்தது.

இத­னால் அதி­கா­ரி­கள் அதிர்ச்சி­ய­டைந்­த­னர். இதையடுத்து மூவரும் 'கியூ' பிரிவு போலி­சா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளி­டம் தொடர்ந்து விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.