463 ஆண்டுகளில் முதல் முறையாக நாகூர் தர்கா மூடல்

463 ஆண்டுகளில் முதல் முறையாக நாகூர் தர்கா மூடல்

1 mins read
b5a9ae78-c3d2-4eaa-964d-93c70da68891
கொரோனா கிருமி தடுப்பு நட­வ­டிக்­கை­யாக நாகையை அடுத்த நாகூ­ரில் உள்ள பாதுஷா சாகிபு ஆண்­டவா் தா்கா 463 ஆண்­டு­களில் முதல் முறை­யாக வெள்­ளிக்­கி­ழமை மாலை மூடப்­பட்­டது. படம்: ஊடகம் -

நாகை: கொரோனா கிருமி தடுப்பு நட­வ­டிக்­கை­யாக நாகையை அடுத்த நாகூ­ரில் உள்ள பாதுஷா சாகிபு ஆண்­டவா் தா்கா 463 ஆண்­டு­களில் முதல் முறை­யாக வெள்­ளிக்­கி­ழமை மாலை மூடப்­பட்­டது.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அனைத்து மத வழி­பா­டு­களும் பக்­தா்­க­ளின் வரு­கை­யை­யும் தற்­கா­லி­க­மாக நிறுத்த தமி­ழக அரசு வேண்­டு­கோள் விடுத்தது.

இதை­ய­டுத்து நாகூ­ரில் உள்ள புகழ் பெற்ற தா்காக்­க­ளுள் ஒன்­றான நாகூா் பாதுஷா சாகிபு ஆண்­டவா் தா்காவில் பக்­தா்­க­ளின் வரு­கைக்கு வெள்­ளிக்­கி­ழமை முதல் தடை­வி­தித்து தா்கா நிா்வாகம் அறி­விப்பு வெளி­யிட்­டுள்­ளது.

இம்­மாா­தம் 31ஆம் தேதி வரை நாகூா் தா்காவில் பக்­தா்­களும் பொது­மக்­களும் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாா்கள் என்­று தெரி­விக்­கப் பட்­டுள்­ளது. வெள்­ளிக்­கி­ழமை அன்று தா்காவி­லி­ருந்து பக்­தா்­கள் அனை­வ­ரும் வெளி­யேற்­றப்­பட்டு, தா்காவின் வாசல் தலை­மாட்டு வாசல், கால்­மாட்டு வாசல், கிழக்கு வாசல் ஆகிய வாசல் கத­வு­கள் அடைக்­கப்­பட்­டன.