தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு

2 mins read
7d42a8c4-1136-4851-a4c2-52df9f59367c
தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள், திரையரங்குகளை மூடுவதற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். படம்: ஊடகம் -

சென்னை: கொரோனா கிருமி பர­வ­லைத் தடுக்­கும் நோக்­கத்­தில் தமி­ழ­கம் முழு­வ­தும் இன்று மாலை ஆறு மணி முதல் 144 தடை உத்­த­ரவு நடை­மு­றைக்கு வரு­கிறது.

இதை­யொட்டி தமி­ழக மாநி­லம் முழு­வ­தும் அனைத்து மாவட்ட எல்­லை­களும் மூடப்­படும் என்று தமிழக அரசு அறி­வித்­துள்­ளது.

தமி­ழக முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி சட்­ட­ச­பை­யில் இந்த அறி­விப்பை வெளி­யிட்­டார்.

கிருமி பர­வ­லைத் தடுக்க தனி­மைப்­ப­டுத்­து­வது முக்­கி­யம் என்­ப­தால் நோய் பாதித்த நபர்­கள் உள்ள மாவட்­டங்­களில் சில கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது அவ­சி­ய­மா­கிறது என்று முதல்­வர் பழ­னி­சாமி குறிப்­பிட்­டார்.

இந்த உத்­த­ரவு இன்று மாலை 6 மணி முதல் தொடங்கி மார்ச் 31 வரை நடை­மு­றை­யில் இருக்­கும். இதன்­படி பல்­வேறு கட்­டுப்­பா­டு­களும் அம­லுக்கு வரு­கின்­றன.

அத்­தி­யா­வ­சிய மற்­றும் அவ­ச­ரப் பணி­களைத் தவிர மற்ற பொதுப் போக்கு­வ­ரத்து, தனி­யார் போக்­கு­வ­ரத்து, கார்­கள், ஆட்டோ, டாக்சி போன்­றவை இயங்­காது.

மாநி­லங்­க­ளுக்கு இடையே, மாவட்­டங்­க­ளுக்கு இடையே அத்­தி­யா­வ­சி­ய­மற்ற இயக்­கம் முற்­றி­லும் தடை செய்­யப்­ப­டு­கிறது.

அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­க­ளுக்­கான பால், காய்­கறி, மளிகை, இறைச்சி, மீன் கடை­கள் போன்­றவை தவிர அனைத்­துக் கடை­களும் வணிக வளா­கங்­களும் பணி­ம­னை­களும் இயங்­காது. அத்­தி­யா­வ­சி­யத் துறை­கள் மற்­றும் அலு­வ­ல­கப் பணி­கள் தவிர மற்ற அரசு அலு­வ­ல­கங்­கள் செயல்­ப­டாது. அத்­தி­யா­வ­சி­யப் பணி­களை மேற்­கொள்­ளும் அர­சுத் துறை­க­ளான மாவட்ட நிர்­வா­கம், காவல்துறை, தீய­ணைப்பு மற்­றும் மீட்­புப்பணி­கள் துறை, சிறைத்­துறை, பொது சுகா­தா­ரம் மற்­றும் மருத்­து­வத் துறை, நீதி­மன்­றங்­கள், உள்­ளாட்சி அமைப்­பு­கள் போன்­றவை தொடர்ந்து இயங்­கும்.

எனி­னும், தனி­ந­பர் சுகா­தார நட­வ­டிக்கை உட்­பட அனைத்து நோய்த் தடுப்பு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களும் அலு­வ­ல­கங்­களில் பின்­பற்­றப்­பட வேண்டும்.

தனி­யார் நிறு­வ­னங்­கள், தக­வல் தொழில்­நுட்ப மற்­றும் உயிர் தொழில்­நுட்ப தொழில் அலு­வ­ல­கப் பணி­யா­ளர்­கள் வீட்­டில் இருந்தே வேலை செய்ய வேண்­டும். எனி­னும், அத்­தி­யா­வ­சிய பணி­க­ளை­யும் மருத்­து­வம் உள்­ளிட்ட பணி­க­ளை­யும் மேற்­கொள்­ளும் தனி­யார் நிறு­வ­னங்­கள் மற்­றும் மருத்­து­வ­ம­னை­கள் தொடர்ந்து இயங்­கும்.

அத்­தி­யா­வ­சிய கட்­ட­டப் பணி­கள் தவிர பிற கட்­ட­டப் பணி­க­ளுக்கு தடை விதிக்­கப்­ப­டு­கிறது. வீடு­களில் இல்­லா­மல், விடு­தி­கள் மற்­றும் பிற இடங்­களில் தங்­கி­ இருக்­கும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பணி­யா­ளர்­க­ளின் நலன் கருதி, பொட்­ட­லம் மூலம் மட்­டும் உணவு வழங்­கும் வகை­யில் உண­வ­கங்­கள் திறந்­தி­ருக்க அனு­ம­திக்­கப்­படும். அம்மா உண­வ­கங்­கள் வழக்­கம் போல செயல்­படும்.

அதே சம­யத்­தில் தடை உத்­த­ர­வால் கர்ப்­பி­ணிப் பெண்­கள், முதி­யோர் ஆகி­யோ­ருக்கு ஏற்­படும் இடை­யூ­று­களை அறிந்து அவற்றை தணிக்க உரிய நட­வ­டிக்கை எடுக்க மாவட்ட ஆட்­சித் தலை­வர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.