கொரோனா கிருமியின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திருநங்கைகள் நடனமாடி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை அருகே போக்கு வரத்து சந்திப்பில் நேற்று இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. கிருமி பரவலைத் தடுக்கும் வகையில் சுத்தமாகக் கைகழுவும் முறை குறித்தும் தனித்திருப்பது குறித்தும் ஒரே சீருடை அணிந்த திருநங்கைகள் கலை நிகழ்ச்சியாக நடித்துக் காட்டினர்.
மாவட்ட திருநங்கைகள் அமைப்பின் ஜமாத் நாயக் எம். ஹசீனா தலைமையில் 20 திருநங்கைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

