மதுரையில் 50 வயது பெண்ணுக்கு கிருமித்தொற்று அறிகுறி

மதுரை: தமிழகத்தில் கொரோனா கிருமித் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் கொரோனா கிருமி நோய் சிகிச்சைக்காக தனி அறை களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவ மனைக்கு சளி, காய்ச்சல் காரணமாக பலர் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களுக்கு கிருமித்தொற்று அறிகுறி இருக்கிறதா என்ற சந்தேகத்தில் பரிசோதனை நடத்தப் பட்டது. ஆனால் யாருக்கும் கிருமித் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே நேற்று கொரோனா கிருமி அறி குறியுடன் 50 வயது பெண் சிகிச்சைக்கு வந்தார். விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தைச் சேர்ந்த அந்த பெண், கேரள மாநிலத்தில் பழக்கடையில் வேலை பார்த்து உள்ளார். அவருக்கு சில நாட்களாக சளி, காய்ச்சல் இருந்ததால் சொந்த ஊரில் உள்ள மம்சாபுரம் அரசு மருத்துவமனைக்கு அவர் வந்தார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள மருத்துவர்கள் அவரது சளி, ரத்த மாதிரிகளைச் சேகரித்து தேனி ஆய்வு மையத் திற்கு அனுப்பினர். அதன் முடிவுகள் வந்த பிறகே அவருக்கு கிருமித் தொற்று உள்ளதா என்பது தெரிய வரும். அதுவரை அவர் மருத்துவர் கண்காணிப்பில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!