சென்னை: தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நேற்று சட்டப்பேரவையில் பேசிய அவர், கொரோனா கிருமி தொற்று காரணமாக கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளியவர்கள் தொழிலின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். எனவே அம்மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தலா ஆயிரம் ரூபாய்: அரசு அறிவிப்பு
1 mins read
-

