வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியோர் மீது வழக்கு பதிவு

வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியோர் மீது வழக்கு பதிவு

1 mins read
b9d84cc2-89ca-45c0-b69a-0ee69527de8f
-

கோயம்­பேடு சீமாத்­தம்­மன் நகர் இரண்­டா­வது செக்­டார் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் தவீப் நூர் முக­மது, 27, தமது தந்தை சாதிக், 62. இரு­வ­ரும் ஈராக் தலை­ந­கர் பாக்­தாத்­தில் இருந்து சென்னை திரும்­பி­னர்.

கோயம்­பேட்­டில் தங்­கி­யி­ருந்த இரு­வ­ரும் வெளி­நாடு சென்று திரும்­பிய தக­வ­லைத் தெரி­விக்­க­வில்லை. இத­னால் இரு­வர் மீதும் 5 பிரி­வு­க­ளின்­கீழ் வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ளது.

சென்னை அண்ணா நகர் இரண்­டா­வது பிர­தான சாலை­யில் வசித்து வந்­த­வர் லட்­சு­ம­ணன் அருண்.

சீனா­வில் இருந்து திரும்­பிய இவர் நோய் பர­வா­மல் தனித்து இருக்க வேண்­டும் என்று அரசு உத்­த­ர­விட்டு இருந்­தது.

இதை மீறி வெளியே சென்­ற­தால் அவர் மீது நோய் பர­வல் தடுப்­புச் சட்­டம் மற்­றும் பேரி­டர் சட்­டப் பிரி­வு­க­ளின்கீழ் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.