'எங்க ஊருக்குள் வெளியூர்க்காரர்கள் நுழைய வேண்டாம்'

'எங்க ஊருக்குள் வெளியூர்க்காரர்கள் நுழைய வேண்டாம்'

1 mins read
f422ed85-52fd-4d14-ae1f-67a9103df236
பக்கத்து ஊர்க்காரர் களை மட்டு மல்லாது அனை வரையும் வியப் படையச் செய்த அறிவிப்பு. படம்: ஊடகம் -

வெள்­ள­கோ­வில்: வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­க­ளா­லும் வெளி­மா­நி­லத்தை சேர்ந்­த­வர்­க­ளா­லும் கொரோனா கிருமி பர­வு­தாக கிராம மக்­கள் கரு­து­கின்­ற­னர்.

திருப்­பூர் மாவட்­டம் மூல­னூர், காங்­கே­யம், வெள்­ள­கோ­வில் பகு­தி­களில் தங்கி இருக்­கும் வட­மா­நி­லங்­க­ளைச் ­சேர்ந்­த­வர்­க­ளுக்கு கட்­டா­யம் மருத்­துவப் பரி­சோ­தனை செய்­ய­வேண்­டும் என்று அந்த பகுதி பொது­மக்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இந்த நிலை­யில் வெள்­ள­கோ­வில் அருகே உள்ள காடை­யூ­ரான் வல­சின் ஊர் எல்­லை­யில் அந்த ஊரைச் சேர்ந்த பொது­மக்­கள் ஒரு அறி­விப்பு பதாகை வைத்­துள்­ள­னர். அந்த அறி­விப்பு பதா­கை­யில் கொரோனா கிருமி தொற்று பர­வா­மல் தடுக்க முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக எங்­கள் ஊரில் குடி­யி­ருப்­ப­வர்­களைத் தவிர வேறு வெளிநபர்­கள் யாரும் உள்ளே வர­வேண்­டாம்" என்ற வாச­கம் அதில் இடம்­பெற்­றுள்­ளது. இந்த அறி­விப்பு பதா­கை­யால் அந்த பகு­தி­யில் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.