சென்னை: கொரோனா கிருமி தடுப்பு எதிரொலியாக சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் கைதிகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும்பொருட்டும் சிறுசிறு வழக்குகளில் அடைக்கப்பட்டு உள்ள விசாரணை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, நீதிமன்றம் மூலம் பிணை வழங்கி நேற்று முன்தினம் விசாரணை கைதிகளில் ஆண்கள் 226 பேரும் பெண் கைதிகள் 36 பேரும் தேர்வு செய்யப்பட்டு படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
திருச்சி மத்திய சிறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருக்கிறார்கள். இவர்களில் 125 பேர் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
எல்லா சிறைச்சாலைகளில் இருந்தும் 1,184 விசாரணைக் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

