ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட திருமண மண்டபம்: சாலையில் நடைபெற்ற திருமணம்

ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட திருமண மண்டபம்: சாலையில் நடைபெற்ற திருமணம்

1 mins read
e5bcd5d4-2155-470c-ac41-873724ee1162
-

ராம­நா­த­பு­ரம்: கொரோ­னா­ கிருமி பாதிப்பால் உல­கெங்­கி­லும் அனைத்து நிகழ்ச்­சி­களும் ரத்­தான நிலை­யில், ராம­நா­த­பு­ரத்­தில் நேற்று ஒரு திரு­ம­ணம் சாலை­யில் நடை­பெற்­றது. ஊர­டங்கு உத்­த­ரவு கார­ண­மாக தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள கலை, திரை அரங்­கு­கள், திரு­மண மண்­ட­பங்­கள் உள்­ளிட்ட அனைத்­தும் மூடப்­பட்­டுள்­ளன.

ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யில் ராம­நா­த­பு­ரத்­தி­லும் திரு­மண மண்­ட­பங்­கள் மூடப்­பட்­டன.

இந்­நி­லை­யில், ராம­நா­த­பு­ரம் ஓம் சக்தி நக­ரைச் சேர்ந்த பி.கே.சண்­மு­கம் மகன் முரு­கா­னந்­தம் (33 வயது) என்­ப­வ­ருக்­கும், ஆர்­எஸ்­மங்­க­லத்­தைச் சேர்ந்த கண்­மணி என்­ப­வ­ருக்­கும் நேற்று திரு­ம­ணம் நடை­பெற இருந்­தது.

திரு­மண மண்­ட­பங்­க­ளைப் பயன்­ப­டுத்த இய­லாது என்­ப­தால், நேற்று மண­மக்­க­ளுக்கு ராம­நா­த­புரம் புதிய பேருந்து நிலை­யம் அரு­கே­யுள்ள வழி­விடு முரு­கன் கோயில் முன்பு சாலை­யில் காலை 9 மணிக்­குத் திரு­ம­ணம் நடை­பெற்­றது.

இந்நிகழ்வில் மணமக்களின் பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டனர். "ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் எப்படியும் நாம் அழைத்தாலும் யாரும் திருமணத்துக்கு வர இயலாது. எனவே சமூக வலைத்தளங்கள் வழி விவரம் தெரிவித்து அதன் மூலமாகவே வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டோம்," என மணமக்கள் தெரிவித்தனர்.