சென்னை: அனைவரும் பொறுப்பான குடிமக்களாக இருந்து சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தொலைக்காட்சி வழி தமிழக மக்களிடம் உரையாற்றிய அவர், கொரோனா கிருமித் தொற்றை எதிர்கொள்ள தமிழகத்துக்கு சிறப்பு நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக குறிப்பிட்டார்.
கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் தமிழக சுகாதாரத் துறையைப் பலப்படுத்துவதற்கு இத்தொகை தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
“மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தும் வசதிகளை உருவாக்குவது, வென்டிலேட்டர் வசதிகளை அளிப்பது, தனிப்பட்ட நபரைப் பாதுகாக்கக்கூடிய உபகரணங்களை வாங்குவது உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காகவும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றுவோருக்கும் உதவ மத்திய அரசு 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கவேண்டும்,” என முதல்வர் மீண்டும் குறிப்பிட்டார்.