தமிழகத்தில் 26 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று

தமிழகத்தில் 26 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று

1 mins read
0d6ad9fb-de41-4ede-9a04-dc352ab04416
ஜலந்தர் நகரில் காய்கறி வாங்க, போதிய இடைவெளிவிட்டு நின்ற பொதுமக்கள். படம்: ஏஎஃப்பி -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித் தொற்­றி­யோர் எண்­ணிக்கை 26 ஆக அதி­க­ரித்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 8 பேருக்­கு கிரு­மித் தொற்று இருப்­பது உறு­தி­யா­னது என சுகா­தா­ரத் துறை அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் தெரி­வித்­துள்­ளார்.

மேலும் கிரு­மித் தொற்­றுக்­கான அறி­கு­றி­க­ளு­டன் 211 பேர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் 15,494 பேர் வீட்­டுக் கண்­கா­ணிப்­பில் இருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

ஊர­டங்கு உத்­த­ர­வைப் பின்­பற்­றா­மல் சாலை­க­ளி­லும் திடல்­க­ளி­லும் கிரிக்­கெட் விளை­யா­டி­ய­வர்­கள் மீது வழக்­குப் பதி­வாகி உள்­ள­தாக தெரி­வித்த அவர், வீட்­டுக் கண்­கா­ணிப்­பில் இருப்­ப­வர்­கள் வெளியே வந்­தால் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என எச்­ச­ரித்­தார்.

இச்­ச­ம­யம் மருத்­து­வர்­கள், தாதியர்­க­ளின் பாது­காப்­பு­தான் முக்­கி­யம் என்­றும் அவர்­க­ளுக்­குத் தினந்­தோ­றும் 60 ஆயி­ரம் முகக் கவ­சங்­கள் கிடைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே கன்­னி­யா­கு­மரி அரசு மருத்­து­வ­ம­னை­யில் 40 வயது ஆட­வர் உயி­ரி­ழந்­த­தால் பர­ப­ரப்பு ஏற்­பட்டது. எனி­னும் அவர் கொரோனா கிரு­மித் தொற்­றால்­தான் உயி­ரி­ழந்­தாரா என்­பது உறுதியாக­வில்லை.

குவைத் நாட்­டி­லி­ருந்து கடந்த 3ஆம் தேதி சொந்த ஊர் திரும்­பிய அவ­ருக்கு ஏற்­கெ­னவே மூளைக்­காய்ச்­ச­லும் கல்­லீ­ரல் பாதிப்­பும் இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.