'உணவகம், மளிகை கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும்'

'உணவகம், மளிகை கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும்'

2 mins read
e9c36d59-00cf-4c7d-ab94-71112d5cb48b
ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர், அதிகாரிகள். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் உண­வ­கங்­களும் மளி­கைக் கடை­களும் 24 மணி நேர­மும் இயங்­கும் என தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

இதுதொடர்­பாக அரசு வெளி­யிட்ட செய்­திக்­கு­றிப்­பில், பொது மக்­க­ளுக்கு எந்­த­வொரு பாதிப்­பும் ஏற்­பட்டுவிடக் கூடாது என்ற நல்­லெண்­ணத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே அரசு நட­வ­டிக்கை எடுத்து வரு­வ­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கொரோனா கிருமி தொற்­றுப் பரவல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் குறித்து மாவட்ட ஆட்­சி­யர்­க­ளு­டன் நேற்று முன்­தி­னம் முதல்­வர் பழ­னி­சாமி ஆலோ­சனை மேற்­கொண்­டார்.

இதை­ய­டுத்து அரசு வெளி­யிட்ட செய்­திக்­கு­றிப்­பில், இந்த நோய்த் தொற்று மிக மிகக் கடு­மை­யா­னது என்­ப­தை­யும் இது ஆட்­கொல்லி நோய் என்­ப­தை­யும் இது மனித சமு­தா­யத்­திற்கு பேர­ழிவை ஏற்படுத்த­வல்­லது என்­ப­தை­யும் இதை மக்­கள் உண­ரும் வண்­ணம் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த வேண்­டும் என இக்­கூட்­டத்­தில் முடி­வெ­டுக்­கப்­பட்­ட­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேலும், கொரோனா கிருமி தொற்­றுப் பர­வ­லைத் தடுக்­கும் வகை­யில் தமி­ழக அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரும் நிலை­யில், மூத்த ஐஏ­எஸ் அதி­கா­ரி­க­ளைக் கொண்ட 9 சிறப்­புக் குழுக்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஊர­டங்கு உத்­த­ர­வி­னால் ஏற்­ப­டக்­கூ­டிய இடை­யூ­று­களை தவிர்க்­க­வும், மக்­க­ளுக்­குத் தேவை­யான அனைத்து அத்­தி­யா­வ­சிய சேவை­களும் தடை­யின்றி கிடைப்­ப­தற்­கும் ஏது­வாக இக்குழுக்­கள் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் என அரசு தெரி­வித்­துள்­ளது.

"பெரிய காய்­கறி சந்­தை­கள் இருக்­கும் இடங்­களில் மக்­கள் அதி­க­மாக கூடு­வதை தவிர்க்­கும் வகை­யில், காய்­கறி அல்­லது பழ வகை­களை விற்­கும் கடை­களை விசா­ல­மான இடங்­களில் அல்­லது திடல்­களில் அமைக்க வேண்­டும்.

"அங்கு சமு­தாய வில­கல் முறை­க­ளின்­படி மக்­க­ளி­டையே 3 அடி தூரம் இடை­வெளி இருக்க வேண்­டும். மளி­கைக் கடை­க­ளி­லும் மருந்து கடை­க­ளி­லும் காய்­கறி கடை­க­ளி­லும் சமூக வில­கல் முறையை தீவி­ர­மாக பின்­பற்­ற­வேண்­டும்," என அரசு செய்­திக்­கு­றிப்­பில் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

கர்ப்­பி­ணிப் பெண்­கள், ரத்­தக் கொதிப்பு, நீரி­ழிவு, காச நோய், எச்­ஐவி தொற்று உள்­ளோர் அரசு மருத்­து­வ­ம­னை­களில் மருந்து, மாத்­தி­ரை­கள் பெறு­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு இரு மாதங்­க­ளுக்­குத் தேவை­யான மருந்து, மாத்­தி­ரை­கள் வழங்­கப்­பட வேண்­டும் என அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இதற்­கி­டையே சேலத்­தில் கர்ப்­பி­ணி­கள், முதி­யோர், ஆத­ர­வற்­றோர் ஆகி­யோ­ருக்கு உணவு, மருந்­துப் பொருட்­கள் உரிய நேரத்­தில் வீடு தேடி வர மாவட்ட நிர்­வா­கம் சார்­பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக வரு­வாய்த்­துறை அதி­கா­ரி­க­ளைத் தொடர்பு கொள்­வ­தற்­காக உதவி மைய தொலைபேசி எண்­கள் அறி­விக்­கப்­பட்டு உள்­ளன.

கொரோனா கிருமி பாதிப்பு தொடர்­பில் அர­சின் உத­வி­க­ளைப் பெற, தக­வல்­க­ளைச் சொல்ல பொது­மக்­களும் இந்த உதவி மைய எண்­க­ளைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.