கொரோனா கிருமித் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் சிறப்பு மருத்துவமனை

கொரோனா கிருமித் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் சிறப்பு மருத்துவமனை

1 mins read
111dc430-b8b5-4c5f-a45a-bc7253739e06
சிறப்பு மருத்துவமனையில் விஜயபாஸ்கர் ஆய்வு. படம்: ஊடகம் -

சென்னை: கொரோனா கிருமித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்க சென்­னை­யில் சிறப்பு மருத்­து­வ­மனை அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் தமி­ழ­கத்­தில் நேற்று மேலும் 6 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக சுகா­தா­ரத்­துறை அறி­வித்­துள்­ளது. இதன் மூலம் பாதிக்­கப்­பட்­டோ­ரின் ஒட்­டு­மொத்த எண்­ணிக்கை 35ஆக அதி­க­ரித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் மாலை வரை தமி­ழ­கத்­தில் 29 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்­பது உறு­தி­யாகி இருந்­தது. இந்­நி­லை­யில் மதுரை, ஈரோடு, சென்­னையைச் சேர்ந்த தலா 2 பேருக்கு கிருமித் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­ட­தாக அரசு நேற்று அறி­வித்­தது. இந்த எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கடந்த சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு சென்­னை­யில் புதிய தலை­மைச் செய­ல­கம் கட்­டப்­பட்­டது. எனி­னும் பின்­னர் அது பல்­நோக்கு சிறப்பு மருத்­து­வ­ம­னை­யாக மாறி­யது.

இந்­நி­லை­யில், இந்த பல்­நோக்கு மருத்­து­வ­ம­னையே தற்­போது கொரோனா சிறப்பு மருத்­து­வ­ம­னை­யாக மாற்­றப்­பட்­டுள்­ள­தாக சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் தெரி­வித்­துள்­ளார்.

இந்த மருத்­து­வ­ம­னை­யில் 350 படுக்­கை­கள் கொண்ட தனித்­தனி பிரி­வு­கள், நோயா­ளி­களை தனி­மைப்­ப­டுத்­தும் வசதி, கொரோனா கிருமி பாதிப்­புக்கு சிகிச்சை அளிக்க தேவை­யான வச­தி­கள் அனைத்­தும் இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், இந்­தச் சிறப்பு மருத்­து­வ­ம­னையை தாமே நேரில் சென்று ஆய்வு செய்து திருப்தி அடைந்­த­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.